மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற சமய நல்லிணத்தை நிகழ்ச்சி மதுரை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் அபுதாகிர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து
வள்ளலார் சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சக்தி ஹரிகரன் கூருகையில்
வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என கூறினார்கள் அந்த கருணையின் வடிவமாக இஸ்லாமியர்கள் இந்த மார்க்கத்தை கடைபிடிக்கிறார்கள் இந்த நோன்பு காலத்தில் உங்கள் மனநிலை பக்குவப்படுத்தி நாம் அருமையாக உணர்கிறோம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது நோன்பை முடிக்கும் போது நிறைய மாற்றங்கள் உருவாகிறது. இந்த நோன்பை பின்பற்றினால் அன்பு கருணை நிலை பெற்று இருக்கும் கடவுளின் பெயரால் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்கள் உண்மையான இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்த ஒரு செயலும் செயல்பட மாட்டார்கள் திருப்பரங்குன்றம் மலை மேல் இருக்கின்ற சிக்கந்தர் மலை மீது இஸ்லாமியர்களை விட இந்துக்கள்தான் அதிகமாக சென்றுள்ளனர்.இந்த பாதுஷாவுக்கு கலர் அமைத்து தந்ததே இந்த மண்ணை ஆண்ட பாண்டிய மன்னர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தவராக எடுத்துரைத்து கலவரத்தை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையான இந்து சகோதர்கள் நாங்க எல்லாம் ஒற்றுமையாக வாழ வலியுறுத்தி வருகிறோம் மதங்களை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லைஎன கூறினார்.
அதன் பின்னர் பேசிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. கொள்கையில்
14 மணி நேரமாக உங்களை இறைவனிடம் ஒப்படைத்து நோன்பு இருக்கின்ற இந்த நிகழ்ச்சியை திறக்கின்ற நேரம் உங்களை சந்திப்பதில் நான் உங்கள் உணர்வுகளை மதிக்கக்கூடிய அடிப்படையில் உங்களுடன் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் நபிகள் நாயகம் கூறிய பொன்மொழிகள் தான் உலகில் அனைவரும் பின்பற்றும் பொன் மொழியாக உள்ளது. அனைவருடன் ஒற்றுமையும் சகோதரத்துடன் வாழ வலியுறுத்தியதை கடைபிடிக்கின்றனர். எஸ்டிபிஐ கட்சியினர் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவது இனி தொடரும் பொதுச்செயலாளர் வழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் இப்தார் நோன்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில்
மாநில பொதுச் செயலாளர் அகமது நவமி. கத்தோலிக்க திருச்சபை பால் பிரிட்டோ மதுரை டவுன் காஜி சபூர் வகையதின்.
ஆகியோர் உட்பட 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.