கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக வரும் 8.03.2025 அன்று கிருஷ்ணகிரி அரசு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதையடுத்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் . அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலர் .கௌரிசங்கர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் .பிரசன்ன பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சு.மோகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



