புதுக்கோட்டை, பிப்.11
புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர அதிமுக 10 வது வட்டக் கழகம் மற்றும் தெற்கு மாநகர இளைஞர் அணி சார்பில் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் சிவகங்கை மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து குதிரை, மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு. சிறிய மாடு, பெரிய குதிரை, சிறிய குதிரை என 4 பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குதிரை, மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.