நாகர்கோவில் – நவ – 09,
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்த சுமார் 50- க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அழித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்த தங்க சுஜிதா (41) இவரது இரண்டாம் கணவர் ராமசந்திரன் , மகள் ஷாஜினி (21), மகன் (அபினேஷ்), ஆகியோர் எங்கள் ஊரான அச்சன்குளம் பகுதியில் வசித்து வந்தனர். தங்க சுஜா எங்கள் ஊரில் பல மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்தார். மேற்ப்படி
இவர்களுக்கு ஆதரவாக இரண்டு தனியார் வங்கி கிளை மேலாளர்கள் தலைமையில் நடைபெற்று வரும் குழுக்களுக்கும் தங்கசுஜிதா தான் தலைவி ஆவார். நாங்கள் அனைவரும் உறுப்பினர்களாக இருந்து வந்தோம். தங்க சுஜிதா மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டங்களின் போது எங்களிடம் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்றும் எங்களது கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டு எங்களது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி சுமார் ரூ 50 இலட்சத்திற்க்கு அதிகமாக கடன் பெற்றுவிட்டு தவணை தொகையினை கட்டாமல் இருக்கவே வங்கி ஊழியர்கள் எங்களது வீட்டிற்க்கு வந்து கடனை திருப்பி செலுத்தும் படி கூறி வருகின்றனர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து தங்க சுஜிதாவிடம் சென்று கேட்டால் உங்களால் முடிந்ததை பாருங்கள் என கூறி வந்த நிலையில் தற்போது குடும்பத்துடன் தலைமறைவு ஆகிவிட்டார். மேலும் தங்க சுஜிதா குடும்பத்துடன் வெளிநாடு தப்பி செல்வதாக கூறப்படுகிறது. நாங்கள் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே எங்களை ஏமாற்றி வெளிநாடு தப்பி செல்ல இருக்கும் தங்க சுஜிதா மற்றும் அவரது குடும்பத்தினர் அவருக்கு துணை போன வங்கி மேலாளர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தரும்படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு தலைவியால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த ஊர் மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர், தீபக், ஜோஷ், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.