கன்னியாகுமரி மாவட்ட வில்வண்டி மற்றும் தட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் நலச்சங்கம் சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் குமரி கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன் ,தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், கழக நிர்வாகிகள் வில்வண்டி தட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் இருந்தனர்.



