நாகர்கோவில், அக். 16 –
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை மறுநாள் 18. ம் தேதி நடைபெறவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, அட்டை பெற்ற நபர்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணிகள் (மகப்பேறு) என மூன்றாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசணை உள்ளிட்ட ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிட்சை, சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.
நாளை மறுநாள் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கட்டையன் விளை, கேசவதிருப்ப புரம், பள்ளிவிளை, வாத்தியார்விளை, கிருஷ்ணன்கோவில், சி.பி.எச் ரோடு, மேல கலுங்கடி, வடசேரி, கணியான் குளம், அருந்தியார் தெரு, காமராஜபுரம், புதுக்குடியிருப்பு, கிறிஸ்து நகர், வாட்டர் டாங்ரோடு, கோர்டு ரோடு உள்ளிட்ட வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு அருகாமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, மாநகர் நகர்நல அலுவலர் மரு.ஆல்பர் மதியரசு, மாநகராட்சி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



