தஞ்சாவூர். மே.3.
தஞ்சாவூர் அருகே உள்ள குருங்களூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு பேசினார்
அப்போது அவர் கூறியதாவது
கல்வியில் இடைநிற்றலை தவிர்த்து குழந்தைகளை உயர்கல்வி பெறும் வகையில் நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் பெண்கள் அனைவரும் சேர வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில் அங்கம் வகிப்பதால் தொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் உதவிக்கு முன்னுரிமை பெறலாம் .பொது மக்களுடைய பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத் தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது என்றார் கலெக்டர்.
திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் பாலகணேஷ், வேளாண் இணை இயக்குனர் வித்யா ,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தொழிலாளர் தினத்தை யொட்டி கிராம சபை கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics