திருப்பூர் ஏப்ரல்: 5 செரங்காடு, அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து சத்துணவுக்காக வழங்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது, அதை தொடர்ந்து குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சத்துணவுக்காக அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேசன் அரிசிகளை பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி காங்கயம் கிராஸ் ரோட்டை சேர்ந்த இக்பால் (46) என்பவர் மாவு அரைத்து விற்பனை செய்ய பயன்படுத்தியுள்ளார். அதே போல் அவர் கரட்டாங்காடு, பெரியதோட்டம் உள்ளிட்ட இடங்களில் குறைந்த விலைக்கு கள்ளச்சந்தையில் ரேசன் அரிசிகளை வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இக்பாலை கைது செய்து 210 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும்,அதே பள்ளியைச் சேர்ந்த சத்துணவு பணியாளர் சுமதி, மற்றும் தலைமையாசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


