By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 111 நாட்களாக போராடும் அரசு ரப்பர் தொழிலாளர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 111 நாட்களாக போராடும் அரசு ரப்பர் தொழிலாளர்கள்
கனஂனியாகுமரி

111 நாட்களாக போராடும் அரசு ரப்பர் தொழிலாளர்கள்

Last updated: April 2, 2025 5:16 pm
April 2, 2025 23 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 3

 

குமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூட தொழிலாளர்கள் நியாயமான முறையில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆறு அம்ச கோரிக்கையை நிறைவேற்றி தர கோரி சுமார் 111 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் செவி சாய்க்காத நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொழிற்சங்கம் சார்பில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி தலைமையில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரசு ரப்பர் கழக தொழில் கூட தொழிலாளர்கள் இணைந்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்
அரசு ரப்பர் கழகத்தில் நிரந்தர வேலை மருத்துவ சிகிச்சை, பணிக்கொடை, வருங்காலவைப்பு நிதி மற்றும் ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) பிரச்சனைகள் போன்றவைகள் கோசமாக எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போது முதலாவது பேசிய ரப்பர் தொழில் கூட தொழிலாளியும் தொழிற்சங்க நிர்வாகியுமான சேகர் பேசும்போது

தனியார் முதலாளிகளின் எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை, ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) ஆகிய அனைத்து சலுகைகளும் உள்ளது. இருந்தும் இவை அனைத்திலும் தொழிலாளர்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் அரசு ரப்பர் தொழில் கூட தொழிலாளிகளுக்கு காப்பீடு (இ.எஸ்.ஐ) அறவே இல்லை. வருங்கால வைப்பு நிதி இருப்பினும் நிரந்தர வேலை என்பது இங்கு ஊசலாட்டமாக இருப்பதால் வைப்புநிதி என்பது எதிர்காலத்திற்கு ஏற்றதாக இல்லை. அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் வசிப்பிடம் எந்த வசதியுமின்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது. சாலை வசதிகள் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் என்பது எட்டாக் கனியாவே உள்ளது. இங்கு ஊழியர் காப்பீடு (இ.எஸ்.ஐ) மற்றும் மருத்துவனை அதற்குரிய மருத்துவர், செவிலியர் இல்லை மருந்து மாத்திரைகள் கிடையாது என தெரிவித்த அவர் 111 நாட்களுக்கு மேலாக தொழிற்கூடத் தொழிலாளிகளின் தேவைகளுக்காக போராடிவரும் எங்களின் போராட்டத்திற்கு இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை ஆகவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் எங்கள் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி நிரந்தர தீர்வு காணும் படி கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் வைகுண்ட மணி பேசியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்கு உட்ப்பட்ட கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழகத்திற்க்கு சொந்தமான தொழிற்சாலை அமைத்துள்ளது. இந்த ரப்பர் தொழிற்சாலை. தொழிற்சாலை ஆணையாளர் திருநெல்வேலி அவர்களின் உரிமைப் பெற்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 38 நிரந்திர தொழிலாளர்களும் 12 தற்காலிக தொழிலாளர்களும் 24 மணி நேரமும் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கடந்த 25-11-2024 முதல் E.S.I.C மருத்துவ காப்பீடு உள்ப்பட ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 111-வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அரசு ரப்பர் கழக அதிகாரிகளும் தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கள் இந்த தொழிலாளர்களின் கோரிக்கை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அனைத்து தொழிற்கூட தொழிலாளர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார். நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியபன் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் தொழிற்கூட தொழிலாளர்கள் ரப்பர் கழக நிர்வாகத்தால் தொடர்ந்து நசுக்கப்படுவதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படுவதையும் கூறி 111 நாட்களுக்கு மேலாக போராடும் தொழில் கூட தொழிலாளிகளின் ஆறு அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தொழிலாளிகளின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டுமென கூறி சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட துணைச் செயலாளர்கள் சுகுமாரன், பார்வதி ஆகியோர் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் திலக், பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் கே எல் எஸ் ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஸ்வரன், வேலாயுதம் வடக்கு பகுதி செயலாளர் 11-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீ லிஜா, 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அக்ஷயா கண்ணன், மாநில கழக, மாவட்ட கழக, மண்டல கழக, ஒன்றிய நகரக் கழக, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்கூட தொழிலாளிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக அதிமுக தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் வைகுண்ட மணி தலைமையில் கீரிப்பாறை அரசு ரப்பர் தொழில் கூட தொழிலாளிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி மனு அளித்தனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

வீட்டை உடைத்து நகை திருட்டு

குமரியில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்கள் நாளை தொடங்குகிறது

பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பூர்மாவட்டம்

இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்

June 20, 2024 59 Views
விடுதி முன்பு உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை.
சர்வதேச காதுகேளாதோர் தினம், இந்திய சைகை
பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?