சென்னை.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசு தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க ஒதுக்கியிருக்கும் நேரத்தை கூட்ட வேண்டும் என்ற பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்
தீபாவளி பண்டிகை நாளில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்ற அறிவிப்பு இந்த வருடமும் வெளியாகி காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் என்று குறிப்பிட்டு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 4 ஆண்டுகளாக தொடர்கிறது.
இருப்பினும் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படாத பட்டாசுகளை வெடிக்க அறிவுறுத்த வேண்டும்
மிக முக்கியமாக பொது மக்கள் பட்டாசு வெடிக்க காவல்துறையால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்
பட்டாசு வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை ஆகியவற்றை இந்த வாரம் பள்ளி, கல்லுரிகளில் மாணவர்களுக்கு அரசு சார்பிலே விழிப்புணர்வை ஏற்படுத்தி
முக்கியமாக தமிழக அரசு பள்ளி, கல்லுரிகளில் பட்டாசு வெடிப்பது சம்பந்தமான விழிப்புணர்வை தகவலை அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.