மதுரை மே 24
மதுரை, 2025 ஆண்டிற்கான (மகளிர்), தொழிற்பயிற்சி நிலையம், செக்கானுாரணி/ அரசு உதவி பெறும்/சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவ, மாணவியர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த விவரங்கள் இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் தேர்ச்சி விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ. 50/- னை விண்ணப்பதாரர் Debit Card/Credit Card/Net Banking/G-Pay வாயிலாக செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் : 19.05.2025
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்: 13..06.2025
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேலும், தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும் நேர்வில் ricentremdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அலைபேசி எண்ணிற்கோ (94990 55748) தொடர்பு கொண்டு தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட திறன் பயிற்சி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.