மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடு துறையில் மகாதான தெருவில் புதிய குழந்தைகள் படிக்கும் மாண்டி சோரி பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. சீர்காழியில் உள்ள குட் சாமரிட்டன் கல்வி குழுமத்தின் கிளையாக மயிலாடுதுறையில் குட்சாமரிட்டன் மாண்டிசோரி பள்ளியை பள்ளி குழும தலைவர் இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த பள்ளியில் குழந்தைகள் வீட்டி உள்ள மாதிரி சூழ்நிலையை உருவாக்கி குழந்தைகளுக்கு ஜீனியர் R.K.G. மற்றும் சீனியர் R.K.G. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வி ஜி கே செந்தில்நாதன், தமிழ் சங்கத் தலைவர் பவுல்ராஜ், இன்ஜினியர் ஜி பில்டர்ஸ் பாலாஜி, தொழிலதிபர் ஆர் எஸ் கே பாண்டுரங்கன், ஆர் எஸ் கே கோபாலகிருஷ்ணன், செந்தில்வேல், அதிமுக சேர்ந்த சையதுஉமர், உள்ளிட்ட ஏராளமான குழந்தைகளின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் குட்சா மரிட்டன் பள்ளி குழும டைரக்டர் அலெக்ஸாண்டர் ஹெப்லின் நன்றி உரை ஆற்றினார்.



