மதுரை மே 2,
மதுரையில் நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் ரசிகர்கள் கொண்டாட்டம் மதுரை மாவட்டத்தில் 20- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கருடன் திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் சூரி அதிகமாக வந்து செல்லும் மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள சினிப்ரியா காம்ப்ளக்ஸ் திரையரங்கில் கருடன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால் ஏராளமான ரசிகர்கள் திரையரங்கள் முன் குவிந்தனர். முன்னதாக மதுரை மாவட்டத்தில் அகில இந்திய சூரி நற்பணி இயக்கத்தின் தலைவர் எம் ஆதீஸ்வரன், பொது செயலாளர் சூரிய பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆவின் பால் விநாயகர் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வந்து சினிப்பிரியா தியேட்டரில் வைக்கப்பட்ட சூரியின் பிரமாண்ட கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து டி. ஜே பாடலுக்கு பெண்கள் குத்தாட்டம் போட்டனர். திரைப்படம் காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.



