திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம், திண்டுக்கல் திருவருட் பேரவை, திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை, செல்வ விருட்சம் கருத்தரித்தல் மையம் மற்றும் ஸ்மைல் டென்டல் ஹெல்த் கேர் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் திருவருட் பேரவையின் இணைச் செயலாளர் Ln.M. திபூர்சியஸ் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் தொடக்கப்பள்ளியின் நிர்வாகி அருட்சகோதரி
L.சகாயமேரி, தலைமை ஆசிரியர் அருட் சகோதரி L.ஜெயராணி, திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்கள் Ln.A.லியோ, Ln.K.முத்துக்குமார், பொருளாளர் Ln.S. சையதுசூரஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், திண்டுக்கல் மாநகராட்சி 24- வது மாமன்ற உறுப்பினர் M. ஸ்டெல்லாமேரி, திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை இயக்குனர் Dr.J.
செல்வராணி,
திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் Ln N. ஸ்ரீகாந்த், திண்டுக்கல் கருப்பட்டி காபி நிலைய உரிமையாளர் Ln .M. கிருஷ்ணகுமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் முத்தழகுபட்டி ஊர் நாட்டாண்மை R. ஜெயராஜ் , ஊர் சேர்வை J.நோவா அமலநாதன்,A.சூசை சகாயராஜ்,S. பாஸ்கர் விஜய் ஆனந்த், ஊர் பொருளாளர் S. ஆனந்த தர்மராஜ் ஊர் செயலாளர் R. ஞானசேகர் முத்தழகுபட்டி உதவி செயலாளர் ஆசிரியர் S ஜெரோம்அருள் ராயன் , அதிமுக மேற்குப்பகுதி பிரதிநிதி S.ஜேசுராஜ் (எ) ராஜப்பா, ஊர் நிர்வாகி வாலை கட்டை அமுல்ராஜ்,
ஊர் பெரிய தனக்காரர்கள் மற்றும் டிரஸ்ட் மெம்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இம் மருத்துவ முகாமில் ஸ்ரீ அமோக மருத்துவமனை பொதுநல மருத்துவர் Dr. சுசித்ரா பல் மருத்துவர் Dr. ஆயிஷா ஆகியோர் கலந்து கொண்டு சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த அழுத்தம் கண்டறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது. குழந்தையின்மைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பல் மருத்துவம் மற்றும் இம்பிளாண்ட் சிகிச்சைக்கு இலவச ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுவான நோய்களுக்கும் பரிசோதனை செய்து, இலவசமாக மருந்து, மாத்திரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இம்மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவர் Ln. N. தனுஷ்கோடி சிறப்பாக முகாமை ஒருங்கிணைத்தார்.