கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஐகொத்தப்பள்ளி கிராமத்தில் சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி சார்பில் கல்லூரி முதல்வர் டாக்டர். பார்த்தசாரதி மற்றும் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.வி ஹரிஹர சுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனைப்படி இலவச இயல் முறை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரீனா கிரிதரன் வரவேற்புரை ஆற்றினார், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் எம். ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சி. கனியமுதன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் கழுத்து வலி, தசை பிடிப்பு, தோள்பட்டை வலி பக்கவாதம், முதுகு வலி, நரம்பு இழுத்தல், கை கால் வலி, தண்டுவட பாதிப்புகள் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவர்கள் வே. காயத்ரி, தனுசியா, வர்ஷா,ரோகிதா, மாரிச்செல்வி, உஷா ஸ்ரீ, பூஜா, ஹாசினிபாலா, ஜெகன், இசக்கியா ஜான் போவஸ், பேசில் தாமஸ் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து ஜெகதேவி, அஞ்சூர், மகாதேவ கொள்ளஹள்ளி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.



