ஈரோடு மே 25
ஈரோடு அரிமா சங்கம், ஈரோடு பி வி பி அரிமா சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு வில்லரசம்பட்டி எஸ் எம் வி பி மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்தது வில்லரசம்பட்டி காபி டாடி உரிமையாளர் சரவணன் ஏற்பாட்டில் நடந்த இந்த முகாமில்
முன்னாள் துணை மேயரும், அதிமுக சூரியம்பாளையம் பகுதி செயலாளருமான கே சி பழனிச்சாமி
ஈரோடு முன்னாள் மூன்றாம் மண்டலத் தலைவரும், அதிமுக பெரியார் நகர் பகுதி செயலாளருமான மனோகரன்
ஈரோடு BVB பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம் ராமகிருஷ்ணன்
ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
பெரியசேமூர் பகுதி செயலாளர் தங்கமுத்து, சூரம்பட்டி பகுதி செயலாளர் ஜெகதீஸ் சூளைப் பகுதி செயலாளர் எம் ஜி பழனிச்சாமி,மரப்பாலம் பகுதி செயலாளர் சுப்பிரமணி, கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் கோவிந்தன்,10 வது வட்ட செயலாளர் தேவராஜ், ஈரோடு அரிமா சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஜீவா மனோகர், அமுத சுரபி ரவி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



