ஈரோடு, ஜூன் 10 –
ஈரோடு மாவட்டம் சிறுவலூர் வெள்ளாங்கோவிலில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது அவர் 174 பயனாளிகளுக்கு ரூ.1.92 கோடி மதிப்பில் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, இது போன்ற மனு நீதி முகாம்கள் அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளவும் இதன் மூலம் கிராம மக்களும் பயன்பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். முன்னதாக பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.



