ஈரோடு டிச 10
ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஈரோடு அரிமா சங்கம், பி.வி.பி. அரிமா சங்கம் மற்றும் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் ஈரோடு வில்லரசம்பட்டி நால் ரோட்டில் உள்ள எஸ்.எம்.வி.பி .மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கண்டு சிகிச்சை பெற்றனர். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் வாகனம் மூலம் ஈரோடு அரசன் ஆஸ்பத்திரிக்கு இலவச கண் ஆபரேஷன் செய்வதற்காக அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த முகாமை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார் . சூரியம் பளையம் பகுதி அதிமுக செயலாளர் முன்னாள் துணை மேயர் கே சி பழனிசாமி பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் மனோகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கண்டனர்
மற்றும் மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியம் தலைமை நிலைய செயலாளர் குமாரசாமி சூரம்பட்டி பகுதி செயலாளர் முருகேசன் பெரிய
சேமூர் பகுதி அதிமுக செயலாளர் தங்கமுத்து கவுன்சிலர் குமரவேல் ஜீவா மனோகரன் மற்றும் நிர்வாகிகள் லோகசாமி தேவராஜ் முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர் ஈரோடு அரிமா சங்க தலைவர் பன்னீர்செல்வம் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்
இதற்கான ஏற்பாடுகளை டாடி சரவணன் செய்திருந்தார்.