மதுரை பிப்ரவரி 19,
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் அருகே டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள் அதனை தொடர்ந்து மதுரையில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் பணிகளை பார்வையிட்டார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.



