நாகர்கோவில் அக் 4
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ ஆர் இ எல் மணல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரியும், குமரி மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக எடுத்து செல்வதற்கு,
மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கம் செய்திருப்பதாக
அகிய இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துகுமார் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ ஆர் இ எல் மணல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், கனிம சுரங்க திட்டத்தை ரத்து செய்ய கோரியும் கடந்த 01.10.2024 அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய மீனவர் சங்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக எடுத்து செல்வதற்கு, மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில்
கொளரவத் தலைவராக பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளாரும், அமைப்பாளராக தோழர் அன்டன் கோம்ஸ், துணை அமைப்பாளர்களாக நாஞ்சில் ஜி ஆர். சேவியர், முத்துகுமார் ஆகியோரும், ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் ராஜா (சென்னை) மற்றும் உயர்மட்ட கமிட்டியில் அருட்பணி.டன்ஸ்டன் சிபிடி , அருட்பணி. பிரான்சிஸ் சேல்ஸ், ஜான் அலோசியஸ், தேவதாஸ், வழக்கறிஞர். கிறைஸ்ட் மில்லர், மணி (சென்னை), வழக்கறிஞர். ஹென்றி டிபேன் (மதுரை), வழக்கறிஞர். அருள்ராஜ், பத்மதாஸ், சேவியர் மனோகரன், ஜெபமணி, ஜான்கிறிஸ்டோபர், வழக்கறிஞர். வெற்றிவேல், விக்ரமன், அல்காலித், கருங்கல் தாஸ், தாமஸ், ரவி, அலெக்ஸாண்டர், தா.வி.ராகவராஜ், பொன்னுலிங்க ஐயன், கிறிஸ்டி ரமணி, பிளவர் மேரி, ரேச்சல் மேரி ஆகியோர் தங்கள் பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.எனவும்
அடுத்த கட்டமாக தேசிய மற்றும் மாநில அளவில் போராட்டத்தை விரிவுப்படுத்த ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக
அகிய இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துகுமார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



