தஞ்சாவூர் செப்.7
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான வன் கொடுமை தீர்வு காணும் வகையில் பாலின வள மையம் அமைக்கப் பட்டுள்ளது என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டாண் மை மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவோணம் திருவிடைமருதூர் அம்மாப்பேட்டை ஆகிய மூன்று வட்டாரங்களில் பாலின வள மையம் -வானவில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையமானது வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மையம் குடும்ப வன்முறை மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பிரத்யோக அமைப்பாக உருவாக்க ப்பட்டுள்ளது.
இந்த மையம் திருவோணம் வட்டாரத்தில் காவாளிப்பட்டி சேவை மையத்திலும் (தொடர்பு எண் 6369849825 )திருவிடை மருதூர் வட்டாரத்தில் வட்டார சேவை மையத்தின்(தொடர்பு எண் 99658 55254)அம்மாபேட்டை வட்டாரத்தில் வட்டார சேவை மையத்தின் (தொடர்பு எண் 87549 90178)
செயல்பட்டு வருகிறது .இந்த பாலின வள மையத்தினை பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.



