ஈரோடு மே 29
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி கிராமத்தில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிற்கிணங்க கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை காரணமாக வெள்ள நீர் செல்லும் பகுதியில் வசித்த 52 குடும்பங்கள் பாதுகாப்பாக காந்திபுரம் மேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரவு தங்க வைக்கப்பட்டனர்.
முகாமில் தங்க வைக்கப்பட்ட வர்களுக்கு உணவு, தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது முகாமில் தங்க வைக்கபட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து, கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவ முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். நம்பியூர் காந்திபுரம்மேடு, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது, நம்பியூர் வட்டாட்சியர் மாலதி, நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.