சுசீந்திரம் நவ 18
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆஸ்ரமத்தில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் குமரி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலை விழாக்கால அன்னதான ஆரம்ப விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். அன்னதான ஆரம்ப விழா நேற்று சுசீந்திரம் ஆஸ்ரமத்தில் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு இல்லத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் மதுசூதனப்பெருமாள் தலைமை வகித்தார். ஐயப்ப பூஜையை மாவட்ட இணைச் செயலாளர் சுப்பிரமணியன் நடத்தினார். மகளிர் அணியின் சார்பில் இறை வணக்கம் பாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
இவ்விழாவில் தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் ஜெஸீம், தினேஷ், முத்துக்குமார், சுசீந்திரம் பேரூர் கழகச் செயலாளர் குமார், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் நாகசாயி, தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் பகவதியப்பன், மயிலாடி பேரூர் கழகச் செயலாளர் மனோகரன், சுசீந்திரம் பேரூர் 9-வது வார்டு கிளை செயலாளர் மணி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சுபாஷ், கழக நிர்வாகிகள் பாலன், வெங்கடேஷ், மயிலாடி பெருமாள், மணிகண்டன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.