அரியலூர், டிச;05
அரியலூர் மாவட்டத்தில் நேற்று அதி காலை முதல் மூடு பனி காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோரும் , நான்கு சக்கர வாகனத்தில் செல்வோரும் வாகனத்தின் முகப்பு விளக்கினை ஒளிரவிட்டபடி சென்றனர். மேலும், மூடு பனியால் மிதிவண்டியில் செல்வோர் மிகுந்த பயத்துடன் சென்றனர். இந்த மூடு பனி மிகவும் விஷ தன்மை உள்ளது எனவும் மூடுபடியால் மக்கள் காலை 9 மணி வரை வெளியே வர முடியாமல் மிகவும் அவதியிற்று வந்தனர். கடந்த ஒரு வார காலமாக ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாடு முழுவதும் அதிலும் ஒரு சில மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பாதிப்பாக அரியலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வந்தது அதன்படி இரண்டு நாட்களாக மழை இல்லாமல் விட்டு விட்டு மழை பெய்தும் வந்த நிலையில் தற்போது நேற்று காலை அதிக பனிமூட்டம் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி பொழிந்தது.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்