குமரி மாவட்டம் மணக்குடி குருசடி தெருவை சேர்ந்தவர் ஆன்றனிஜார்ஜ் வயது 37, கடல் தொழில் செய்து வந்தார். இவருக்கு 2 ஆண் பிள்ளைகளும், 1 பெண் பிள்ளையும் உண்டு. இவரின் அம்மா உடல் நிலை சரி இல்லாமல் கடந்ல 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அந்த மன வேதனையில் அவர் சாப்பிடாமலும், எப்போதும் சாக வேண்டும் என புலம்பி கொண்டிருந்தவர். நேற்று இரவு படுக்கை அறைக்கு சென்றவர் சாப்பிடுவதற்காக மனைவி லிற்றிசியா கூப்பிடும்போது சத்தம் ஒன்றும் தரவில்லை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் நைலான் கயிறால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டவரை கீழே இறக்கி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆன்றனிஜார்ஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி லிற்றிசியா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



