கன்னியாகுமரி ஜன 18
பொங்கலை முன்னிட்டு வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி மற்றும் அம்மச்சியார் கோவில் ஊர் பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான அடிமுறை, சிலம்பம் குழு போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு காமராஜர் அகாடமி இயக்குநர் சுரேஷ் தலைமை தாங்கினார். வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி இயக்குநர் விஜய் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பரசுராம் போட்டிகளை துவக்கி வைத்தார். அடிமுறை சுவடு முறைகள், மல்லு, குஸ்தி, சிரமம், எடுத்தெறி, பூட்டு பிரிவு, ஆயுதப்பெருக்கம், சிலம்பம் உட்பட பல்வேறு முறைகள் கொண்ட குழு போட்டி நடைபெற்றது. விளையாட்டின் நடுவர்களாக தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக குமரி மாவட்ட செயலாளர் மணிகண்ட பிரபு, பேராசான் கிறிஸ்துதாஸ் உட்பட பல்வேறு நபர்கள் செயல்பட்டனர்.
முதல் பரிசை தலக்குளம் ஜீவா வேலப்பன் ஆசான் குழுவும், இரண்டாம் பரிசை மைலாடி பூவார் நினைவு சிம்பாட்ட கழகமும், மூன்றாம் பரிசை சரல்விளை வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் பெற்றனர். சிறப்பு விருந்தினராக சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவர் வழக்கறிஞர் ஜார்ஜ் பிலீஜின், பேராசிரியர் முனைவர் அமர்நாத் ஆகியோர் சேர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் குழுக்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர். வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி மாஸ்டர் அரி, சேம், ராபின் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். செயற்குழு உறுப்பினர் காளிமுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஊர் உபதலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நன்றி கூறினார்.