மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே பிறந்த தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே வாழ்க்கை வரலாறு, பெண் கல்வி, விதவைகள் மறுவாழ்வு ஆகியன குறித்து தலைமை ஆசிரியர் தென்னவன் பேசினார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்திரிபாய் பூலே புகைப்படத்தினை பெண் குழந்தைகள் கையில் ஏந்தி கல்வி கற்போம் என உறுதிமொழி ஏற்றனர். ஆசிரியை அருவகம் நன்றி கூறினார். விழாவில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



