கன்னியாகுமரி அக் 7
கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க உறுப்பினர் ரவிச்சந்திரன் 26.09.2024 ந் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் மரணமடைந்த தொழில் சங்க உறுப்பினர் குடும்பத்திற்கு உதவி செய்யும் பொருட்டு உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது. அவ்வாறு திரட்டப்பட்ட நிதியினை நேற்றைய தினம் அவரின் வீட்டிற்க்கு சென்று ரவிச்சந்திரன் மனைவியிடம் நிதிவசூல் செயல்பட்ட மொத்த தொகை 25,650 ரூபாய் காசோலையாக கன்னியாகுமரி மாவட்ட செலாளர் டாக்டர் கிறிஸ்டோபர் தலைமையில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட துணைசெயலாளர் எம்.பி.ஜாண், களியாக்கவிளை பகுதி செயலாளர் சஜின், இணைச் செயலாளர் அபினேஷ், கன்னியாகுமரி பகுதி உறுப்பினர் முருகராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இறந்தவரின் குடும்பத்திற்காக நிதி உதவி வசூல் செய்து தந்த துணைச்செயலாளர் சுரேஷ் மற்றும் நிதி வழங்கிய அனைவருக்கும் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.