ராமநாதபுரம், ஜுலை 16 –
ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை மற்றும் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 123-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. சமத்துவ மக்கள் கழகம் நிறுவனர் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உத்தரவின்படி இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் அறிவுறுத்தலின்படி மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் வழிகாட்டுதலின்படி
முதல் நிகழ்ச்சியாக காலை 8 மணியளவில் மண்டபம் ஒன்றியம் ரெட்டையூரணி கிராமத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் இராமநாதபுரம் ஒன்றியம் பழனிவலசை கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மதியம் 1 மணியளவில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் வேல்முருகன், மாவட்ட அவைத் தலைவர் ஜார்ஜ், மாவட்ட செயலாளர் வேல் மோகன்தாஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், இளைஞரணி செயலாளர் ஜான், இளைஞரணி அமைப்பாளர் ராகுல், மண்டபம் ஒன்றிய தலைவர் பால முனீஸ்வரன், இராமநாதபுரம் ஒன்றிய தலைவர் அஜித், விவேக், மாதேஷ் மற்றும் நிர்வாகிகள் பேரவை சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



