சிவகாசி ஜன 27
சிவகாசி பட்டாசு
பாதுகாப்பு பேரவையின் ஆலோசனை கூட்டம் பாரைப்பட்டியில் நடைபெற்றது. இதில் சில்லறை வியாபாரிகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முறையிட்டனர்.கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பேசுகையில் இந்தியாவின் 90 சதவிகித பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் நகரமாக சிவகாசி உள்ளது. நேரடியாக 15 இலட்சம் மக்களும் மறைமுக ஒன்றரை கோடி மக்களும் பட்டாசு தொழிலால் பயன் பெறுகிறார்கள். இருப்பினும் பட்டாசு தொழிலுக்கு சில ஆண்டுகளாக நெருக்கடிகள் வருவதாக எனக்கு தெரிய வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் சீனா பட்டாசுகளை டெல்லி வரை சென்று நடவடிக்கை எடுத்து முற்றிலுமாக தடை செய்தொம். தங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை கூட தைரியமாக வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு வியாபாரிகள் அதிகாரிகளுக்கு பயந்து இருக்கிறார்கள்.சில்லறை வியாபார கடைகளுக்கு
அதிகாரிகள் உரிமம் வழங்குவதில்லை இது சம்பந்தமான பிரச்னையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடவும் தான் தயார் எனவும் மேலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பட்டாசு ஆலையில் விபத்துக்கள் நடப்பதால் ஓட்டு மொத்தமாக பட்டாசு உற்பத்தியை தடை செய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உரிமை இல்லாத செயல் என்றார். பேருந்து மற்றும் இரயில் போக்குவரத்துகளில் கூட விபத்துக்கள் ஏற்படுகிறது. என்பதால் அவையனைத்தையும் தடை செய்து விடுவிர்களா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
கூட்டத்தில் பட்டாசு பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.