ஈரோடு, டிச. 16 –
ஈரோடு மாவட்டம் நசியனூர் பேரூராட்சி ஆட்டையாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது மனைவி லீலாவதி. மண்பாண்ட தொிலாளிகளான இவர்களது வீடு மின் கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது.
இதில் வீட்டில் இருந்த டெலிவிஷன் பெட்டி, பீரோ, பத்திரம், ரேஷன் கார்டு ,ஆதார் கார்டு மற்றும் துணிமணிகள் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
மேலும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விஏஓ, ஆர் ஐ, தாசில்தார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரசின் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.
ஈரோடு மாவட்ட மண் பாண்ட அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான நல சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சி. வெங்கடாசலம் செயலாளர் சசிகுமார் பொருளாளர் ராமசாமி துணைச் செயலாளர் ஒருங்கிணைப்பாளர் சிற்பி முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினர்.
ஈரோடு மாவட்ட மண்பாண்ட அனைத்து அமைப்பு சாரா மற்றும் கட்டுமான சங்க மாவட்ட தலைவர் வெங்கடாசலம் கூறும் போது பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள். எனவே அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



