[8:01 pm, 19/6/2024] +91 90807 28304: சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
சத்தியமங்கலத்தில் உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஈக்வினிட்டி இந்தியா, சமூகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாகக் கொண்ட அவர்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தின் ஆசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் புனரமைப்புக்கு பிறகு பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஈக்வினிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் அவுல் அறக்கட்டளையின் (என்ஜிஓ) நிறுவனர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
வகுப்பறை வசதிகளை மேம்படுத்த கல்நார் கூரை நிறுவுதல் பள்ளி பாதுகாப்பை மேம்படுத்த புதிய வாயில் மற்றும் வளைவு கட்டுதல் குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் கற்றல் சூழலை உருவாக்க வகுப்பறைகளின் ஓவியம் உட்பட பள்ளி மிச்சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. ஈக்வினிட்டி இந்தியாவின் பெருநிறுவன சமூகப் பொறுப்புக் குழுவின் கவனமான மதிப்பீட்டின் மூலம் மாணவர்களுக்கு மிகவும் உகந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் அடையாளம் காணப்பட்டதால் இப்பகுதியிலுள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
ஈக்வினிட்டி இந்தியாவில் நாங்கள் செயல்படும் பகுதிகளில் உள்ள சமூகத்திற்கு கல்வி வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளை அளிப்பதை எங்களது கடமையாக கருதுகிறோம். இந்த பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலை பள்ளியின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம். மேல்நிலைப் பள்ளி குழந்தைகளுக்கான நேர்மறையான கற்றல் அனுபவத்தை வளர்க்கும் மிகவும் வரவேற்கத்தக்க வசதியான மற்றும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வருங்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இந்த திட்டம் ஒரு சான்றாகும் என்று தெரிவித்தார்.
[8:01 pm, 19/6/2024] +91 90807 28304: