மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி, குழந்தைகள் மையத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம், ஒப்பதவாடி குழந்தைகள் மையத்தில், “ஊட்டச்சத்தை உறுதிசெய்” திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் .தே.மதியழகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து, 20 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்கள். உடன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் .ஜெயந்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.