மதுரை ஏப்ரல் 05
திருப்பரங்குன்றம் அடுத்துள்ள நிலையூரில் 1 பிட் கிராமத்தில் கிராம நிர்வாக 1 அதிகாரியாக கந்தவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அப்பகுதி ஆதி திராவிட மக்கள் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் குறைதீர்க்கும் முகாமில் சந்தித்து விஏஓ முறைகேடாக மயான பகுதியில் பட்டா வழங்கியும் தனது மனைவி பெயரில் 18 சென்ட் இடம் மற்றும் எட்டு பட்டாக்கள் வாங்கியுள்ளார்.
எனவும்
மேலும் அவரது அண்ணன் மகன் பெயரிலும் பட்டா வழங்கியுள்ளார். மேலும் பலருக்கு பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளார்.
எனவே
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர். புகாரின் பேரில் கடந்த 28. 3 .2024 அன்று வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரணை செய்து அதன் அடிப்படையில் விஓ கந்தவேல் கடந்த ஏப்ரல் 01 ம் தேதி முதல் உச்ச பட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் விஏஓ கந்தவேல் 15 நாள் விடுமுறை அளித்து சென்றதால் தற்போது புதிதாக பொறுப்பு விஏஓ ராஜாங்கம் பொறுப்பு தலையாரி முருகன் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நிலையூர் 1 பிட் ஆதிதிராவிட மயானம் மற்றும் அருந்ததியர்க்காண மயானத்தில் காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இதையறிந்து வந்த ஆஸ்டின் பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆதிதிராவிட பொதுமக்கள் எங்கள் மயானம் மொத்தம் 99 செண்டு இடம் உள்ளது.
அதை அளந்து சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் மேலும் மயான இடத்தில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரி ராஜாங்கத்திடம் தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதன் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.