மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்தற்கான விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் தேசிய சுகாதார திட்ட இயக்குநர் முன்னிலையில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றமைக்கான பாராட்டுச் சான்றிதழை மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.லெ.அருள்சுந்தரேஸ்குமார் மற்றும் திட்ட மைய அலுவலர் (CMCHIS) மரு.ச.வைரவராஜன் மருத்துவமனை சார்பில் பெற்றுக் கொண்டனர். கடந்த ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை 26,138 நோயாளிகளுக்கு சுமார் ரூபாய் 42 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைத்துவிதமான அறுவை சிகிச்சைகள் மற்றும் டயாலிஸிஸ், இதய சிகிச்சைகள் (Angio plasty), புற்றுநோய் அறுவை சிகிச்சைகள்(Chemo therapy, Radio Therapy), எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், மூளை அறுவை சிகிச்சை, ரத்தநாள அறுவை சிகிச்சை, Cochlear Implant, குழந்தைகள் நல அறுவை சிகிச்சை, சிறுநீரக, எலும்பு மாற்று சிகிச்சை(Transplant) மற்றும் பாலின மாற்று சிறப்பு சிகிச்சை வரை இலவசமாக சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.



