தருமபுரியில் சிந்தனை சிற்பி இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் பிறந்தநாள் மற்றும் நூல் அறிமுக கூட்டம் இலளிகம் தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் சின்னகண்னன்,மாவட்ட பொருளாளர் தோழர் வீரபத்திரன், மாதையன், பச்சாகவுண்டர், ராஜகோபால், தனக்கோட்டி, செல்வம், ராஜி,அலமேலு, எத்துராஜ், காளியம்மாள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். முன்னாள் எம். பி. மற்றும் எம். எல். ஏ வான தோழர் அப்பாதுரை எழுதி வெளியிட்ட “எனது அரசியல் நினைவலைகள்” என்ற நூலை மாதையன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மேனாள் பொதுச் செயலாளர் தோழர் இரவீந்திரன் எழுதி வெளியிட்ட நூலை பிரதாபன் அறிமுகப்படுத்தி பேசினார்கள். இறுதியில் கிருஷ்ணன் நன்றி தெரிவித்து பேசினார்.



