திண்டுக்கலில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு (TNASTF) திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழு, திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அனைத்து வகைப் பள்ளி நிர்வாகிகள் சார்பாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 7.5% உயர்கல்வி இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர் நலன் கருதி ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களையும் கணக்கில் எடுத்து பணியிட நிர்ணயம் செய்வதோடு அரசு அனுமதித்த காலி பணியிடங்களில் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் தமிழ்நாட்டில் 1991 – 1992 – ஆம் கல்வி ஆண்டுக்கு பின்னர் துவங்கப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட தமிழ் வழி பள்ளிகளுக்கு அரசு மானியம் அளித்து முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்
28 – 2 – 2011 – இல் பிறப்பித்த ஆணையினை செயல்படுத்திட வேண்டும் என்றும், உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை எளிமைப்படுத்துவதோடு தகுதியான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், தனியார் பள்ளி ஒழுங்காற்று சட்டம் 2018, விதிகள் 2023ல் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்க நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட தலைவர்
ஜே.ஆன்செலம் ஜேசையா தலைமை தாங்கினார்.
இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட
கையெழுத்துக்களின் பிரதிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், பரிந்துரை செய்யவும் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர்கள் கௌரவத் தலைவர்
எஸ்.பத்மநாபன், துணைத் தலைவர் சி.பாக்கியராஜன், செயலாளர்
டி. மசபியேல் அன்பரசி, துணைச் செயலாளர்
அருட்சகோதரி எல்.ஜெயராணி, பொருளாளர் எ.ஆல்பர்ட் பீட்டர் ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் பெலிக்ஸ் சகாயராஜ் ,டி. ஜெயசுந்தர் மற்றும் மாவட்ட அமைப்பின் கௌரவ ஆலோசகர் எஸ். சந்தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.