சூரம்பட்டி ,அக். 19-
ஈரோடு பெரிய செட்டி பாளையம் டைமண்ட் நகர் பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் மின்சார கம்பி செல்கிறது. இந்த கம்பி நேற்று இரவு மிகவும் தொங்கிய நிலையில் தாழ்வாக இருந்தது .இந்த மின்கம்பி தீ பிழம்புடன் காட்சி அளித்தது. எப்போது வேண்டுமானாலும் கம்பியில் தீப்பிடித்து அறுந்து விழும் நிலையில் இருந்தது .இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அந்த வழியாக நடந்து சென்றவர் களிடமும் வாகனத்தில் சென்ற வர்களிடமும் நின்று கவனமாக செல்லும் படி கேட்டுக் கொண்டனர். இது பற்றி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின் வாரிய ஊழியர்கள் லைன் மேன் கதிர்வேல் மற்றும் பூபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை நிறுத்தினர்.
இதன்பிறகு தீப்பிழப்பாக தொங்கிய நிலையிலிருந்த மின்கம்பியை அகற்றினர்.
இந்த ரோட்டை கடந்து தான் செட்டிபாளையம் மற்றும் 19 ம் நம்பர் ரோடு வழியாக செல்லும் வாகனங்களும் பச்சப்பாளி வையாபுரி நகர் போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்களும் சென்று வருகிறது. மேலும்
இருந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளும் உள்ளன . மக்கள் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இரவு 10 மணிக்கு மேல் ஆகி இருந்தாலும்
மினி வாரிய ஊழியர்கள் விரைந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீ பிழம்புடன் தொங்கிய நிலையில் இருந்த மின் கம்பியை அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .
இதனால் அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொண்டனர்.