மதுரை பிப்ரவரி 10,
மதுரை உசிலம்பட்டியில் மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பாளரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரையாற்றினார். திமுக தலைமைக் கழக பேச்சாளர் குழந்தை ரமேஷ், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் உள்ளிட்ட பலர் மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையுடன் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் வஞ்சித்ததை கண்டித்து பேசினார்கள். இக்கூட்டத்தில் திமுக முக்கிய மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்