நாகர்கோவில் , ஜூலை – 28 ,
மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கை தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கூறி தமிழக முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன அதன் ஒரு பகுதியாக நாகர்கோயில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்பம் செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
மத்திய அரசு வெளியிட்டுள்ள நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை தமிழகத்தை மீண்டும் பாரத ஜனதா அரசு வங்கித்துள்ளது முதலமைச்சர் மு க ஸ்டாலின் மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து தமிழகத்தின் சுயமரியாதையை எடுத்துக் காட்டியுள்ளார்.அவர் அறிவித்ததை தொடர்ந்து கேரளா மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிற அளவிற்கு நாட்டை பாஜக பிளவு படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா அரசியல் சிறுபான்மை இன மக்கள் பாதுகாப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். மாநில அரசுகளின் சுயமரியாதையை மத்திய அரசு வசித்து வருகிறதுஇந்த பட்ஜெட் அறிக்கை பீகார் ஆந்திரா மாநிலங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது மதத்தை வைத்து பிளவுபடுத்திய பா. ஜனதா நமது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து வருகிறது ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்பதை கொண்டு வந்து நாட்டு மக்களின் கலாச்சாரத்தை ஒற்றுமையையும் மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. வேற்றுமை ஒற்றுமை அல்ல நிலைபாட்டை மாற்றி அமைக்க நினைக்கிறது பா.ஜனதாவில் உள்ள அமைச்சர்களின் அமைச்சர்களின் 28 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
மறைத்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவை பற்றி பேச பாரத ஜனதாவுக்கு தகுதி இல்லை மத்திய அரசு ஆளும் மாநிலங்கள் அவர்களது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நன்மை கிடைத்தால் போதும் இந்த வஞ்சக குணத்துடன் செயல்படுகிறது நிதி ஒதுக்கீட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரதிய ஜனதா பாரபட்சம் காட்டி வருகிறது பாரத ஜனதா மிரட்டலுக்கு அஞ்சாத அரசாக திமுக உள்ளது பாரதிய ஜனதாவுக்கும் திமுகவிற்கும் சித்தாந்தம் மற்றும் கொள்கை ரீதியான பிரச்சனை இருந்து வருகிறது பாரதி ஜனதாவுக்கு ஆதரவு தராததால் தமிழ்நாட்டையே அழிக்க பார்க்கிறார் மோடி மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் தகவல் சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவை எப்போது வாபஸ் வாங்குகிறார்களோ அன்றைக்கு மோடி அரசாங்கம் அவிழும் பாரதிய ஜனதா ஆட்சி மத்தியில் ஐந்தாண்டு காலம் வரை நீடிக்காது என அவர் பேசினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேஷன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி சதாசிவம் பார்த்தசாரதி அறங்காவலர் குழு தலைவர் பிரபாகர ராமகிருஷ்ணன் முந்திய செயலாளர் மதியழகன் பிராங்க்ளின் சுரேந்திர குமார் தொல்லை செல்வம் முன்னாள் எம்எல்ஏ ராஜன் மற்றும் ஆரல்வாய்மொழி தொமுச தொழிற்சங்கம் ஓ பி ற்றி கலைச்செல்வன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.