திருப்பத்தூர், ஆக. 26 –
திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பத்தூரிலிருந்து மேலூர் கிராமத்திற்கு புதியதாக பேருந்து வசதி செய்து இயக்கப்பட்டது. பேருந்து செயல்பாட்டுக்கு வந்த மறு நாளே பேருந்து வரவில்லை.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த பனநேரத்தில் செல்ல முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்கள் புதூர் நாடு முதல் நெல்லிவாசல் செல்லும் சாலையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் அவ்வூர் வழியாக பேருந்து இயக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



