வேலூர்_28
வேலூர் மாவட்டம்,
2024 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்காததை கண்டித்தும், ஒன்றிய அரசு தமிழ்நாட்டை புறக்கணிப்பதாகவும் இதை கண்டிக்கும் வகையில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுக வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏ பி நந்தகுமார் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி நந்தகுமார் ,வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மற்றும் திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.