கிருஷ்ணகிரி மே .13
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, பர்கூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஜெகதேவி கூட்ரோடு அருகே நாடு போற்றும் நான்கு ஆண்டு தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க பொது கூட்டம் மாலை 6 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அறிஞர் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் வரவேற்புரையாற்றினார். தலைமைக் கழக பேச்சாளர் செழியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பேரூர் செயலாளர்களான வெங்கட்டப்பன், தம்பிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் அப்சர்பேகம் சான்பாஷா, ஒன்றிய துணை செயலாளர்களான ராஜதுரை, சுரேஷ், மீனாட்சிதங்கமணி, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, மாவட்ட பிரதிநிதிகளான பெரியண்ணன், கிருஷ்ணன், வெங்கடசாமி, மாவட்ட துணை அமைப்பாளர்களான ராதாகிருஷ்ணன், ரூபேஷ், விக்னேஷ், மற்றும் நவீன்குமார், நவாப், நந்தகுமார், ஜாகிதா, வேலு, விக்னேஷ், சரவணன், கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், குமார், கனகராஜ், ரமேஷ், பாலகுமார், மகேந்திரன், சீதாராமன், சண்முகம், ஞானசேகர், தமிழ்வாணன், ரமேஷ், தங்கதுரை, விஜயராஜ், சௌக்கர், சர்தார், அனீஸ்பாபு, சரவணன், பிரபாகரன், சீனிவாசன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டத்தில் கழக இளம் பேச்சாளர் ராஜேஷ் திமுகவின் சாதனைகளை எடுத்துரைத்தார். பின்னர் பேசிய தலைமை கழக பேச்சாளர் செழியன், திமுகவின் நான்கு ஆண்டு சாதனைகளையும் முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளையும், தற்போது நான்கு ஆண்டுகளாக தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமின்றி எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கால ஆட்சியின் சிறப்புகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதே இதற்கு சான்று எனவும் கூறினார்.
இந்த இனிய நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜன், லட்சுமிபிரியா, மாணிக்கம், உள்ளிட்டோரும், இறுதியாக PTA தலைவர் நெடுஞ்செழியன் நன்றி உரையாற்றினார்.