திருமங்கலம். அக்.27.
ஒளி – 2024 என்ற நல்லிணக்க தலைப்பில் 120க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.இதில் உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் கலந்து கொண்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒளி – 2024 என்ற நல்லிணக்க தலைப்பின் கீழ் ஆதரவற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டத்தை ஜிஎன்இ மற்றும் தி ஆனைமலைஸ் குழுமம் இணைந்து மதுரை வி.ஆர்.கிருஷ்ண ஐயங்கார் மஹாலில் நேற்று சிறப்புடன் நடத்தினார்கள்.இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.தி ஆனைமலைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.ரகுராம், மேலாண்மை இயக்குநர் ஆர்.சுகன்யா ரகுராம் மற்றும் ஜி என் இ நிறுவனர் ராஜா, ஒளி அமைப்பாளர் விஷ்வநாத் மற்றும் தி ஆனைமலைஸ் குழுமம் சிஎப்ஒ ராம்குமார், ஆனைமலைஸ் ஏஜென்ஸிஸ் மதுரை சிஇஒ ஆர்.சேதுராஜன் அகியோர் பங்கேற்று நிகழ்வினை நடத்தி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற 120 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி உதவியும், தாழ்வு மனப்பான்மையை போக்கும் வகையில் முன்னேறுவதற்கான ஆலோசனைகளும், தொழில் துவங்குவதற்கு உதவியும் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்வினில் பங்கேற்க
குழந்தைகளுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை ஆனைமலைஸ் ஏஜென்ஸிஸ் மதுரை எப்ஓஎம் ஆர்.கார்த்திகேயன், சீனியர் மேனேஜர் என்.சண்முகம்,பிராஞ்ச் ஹெட் பி.வினோத்குமார், துணை மேலாளர் மயில். ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.