பொதுத்தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி விகிதத்தை உறுதி செய்யும் வகையில், அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி சதவிதம் குறைவாக பெற்ற பள்ளிகளை கண்காணிப்பு அலுவலர்கள் பள்ளிகளை அதிகமுறை நேரில் பார்வையிட்டு தேர்ச்சி சதவிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள் .
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக, பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள 49 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளியில் குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட பாட ஆசிரியர்கள் ஆகியோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட பள்ளி கல்வித்துறை 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் தேர்ச்சி சதவிதத்தின் அடிப்படையில் 49 உயர் /மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், காலாண்டு தேர்விற்கும், அரையாண்டு தேர்விற்கும் உள்ள தேர்ச்சி சதவிதத்தின் வித்தியாசங்களின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தேர்ச்சி சதவிதம் குறைவாக பெற்ற பள்ளிகளை கண்காணிப்பு அலுவலர்கள் பள்ளிகளை அதிகமுறை நேரில் பார்வையிட்டு தேர்ச்சி சதவிதத்தை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கண்காணிப்பு அலுவலர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு உறுதி செய்து கொள்வதுடன் தேர்ச்சி சதவிதத்தை உயர்த்த தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் மாணவ / மாணவியருக்கு பாடங்களை எளிய முறையில் கற்பதற்கான வழிமுறைகளை வழங்க வேண்டும்.
இந்த இரண்டு மாதத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஆணையர், துணை ஆட்சியர், கூடுதல் ஆட்சியர் கொண்ட குழு பள்ளிகளை கண்காணிக்கும் குழு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.மெல்ல கற்கும் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றங்கள் குறித்து அடுத்த மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். வரும் தேர்வில் அனைத்து மாணவர்களும் முழுமையாக தேர்ச்சி அடைவதை ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் உறுதி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.
சிறப்பு பயிற்சி மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளுக்கு பேருந்து வசதி தலைமையாசிரியர்களால் கோரப்பட்டதன் அடிப்படையில் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது. மேலும், தலைமையாசிரியர்கள் TNCMTSE, TRUST, TNTTSE, JEE, NEET, CLAT, NMMS, Club Activities C अफ्रीक மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெறுவதை உறுதி செய்தல் வேண்டும். இப்பணிகளை ஆசிரியர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்களிடையே தினசரி இறைவணக்க கூட்டத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் போதை பொருள் தடுப்பு மன்றங்களின் மூலம் உறுதி மொழி, பேரணி, ஓவியம், கட்டுரை, வினாடி வினா, பேச்சுப்போட்டி போன்ற செயல்பாடுகள் பள்ளிகளில் தொடர்ந்து நடத்தி போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். போதை சார்ந்த பொருட்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள கடைகளில் விற்கப்பட்டாலோ அல்லது மாணவர்களிடம் ஏதேனும் கண்டறியப்பட்டாலோ உடனடியாக Child Help Line 1098, School Education Student Help Line-14417, Anti-Drug Help Line -10581 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்.கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.