தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெலவள்ளி கிராமத்தில் உள்ள பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள இயந்திரங்களை பார்வையிட்டார். பின்னர் ஆட்சியர் கூறியதாவது. மாவட்டத்தில் காரியமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, அரூர் வட்டாரத்தில் சிறுதானியங்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சிறுதானியங்களை பிஸ்கட், சத்து பானங்கள், இனிப்பு, கார வகைகள், காலை சிற்றுண்டிக்கான தானியங்கள், கலவை தயாரிக்க வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். மாவட்டத்தில் விவசாயிகள் சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதனை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கீழ் 2025 -26 இல் தமிழ்நாடு சிறுதானியம் இயக்கம் கொண்டுவரப்பட்டது. கெலவள்ளி கிராமத்தில் பாம்பாறு உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு, தமிழ்நாடு சிறுதானியம் இயக்க திட்டத்தின் கீழ் 75 சதவீதம் மானியத்தில் சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைத்து உள்ளார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 50 டன் சிறுதானியத்தை மதிப்பு கூட்டி பதப்படுத்தி, சந்தையில் விநியோகம் செய்து இந்நிறுவனத்தில் உள்ள ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்
தமிழ்நாடு அரசு சிறுதானியங்கள் பதப்படுத்த மையங்கள் அமைக்க 75% மானியம் வழங்கப்படுகிறது. அதிகப்படியாக ரூ.18.75 லட்சம் மானியம் தவணை முறையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார் .
இதை தொடர்ந்து மொரப்பூர் வட்டாரம், காடையாம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது துணை இயக்குனர் இளங்கோவன், பிடிஓ ஷகிலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics