மயிலாடுதுறை, பிப்.12-
வணிகர் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 1200 புத்தகங்கள் வழங்கல்.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொதுநூலகத்துறை சார்பில் கடந்த 31ம் தேதியில் இருந்து நேற்று 10ம் தேதிவரை 3வது புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. புத்தக்கண்காட்சியை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கடைசிநாளான நேற்று அரசு பள்ளிகளில் பயிலும் 1200 மாணவர்களுக்கு மயிலாடுதுறை வணிகர் சங்கம் சார்பில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி பேசுகையில் மாணவர்கள் பள்ளி கல்வியை மட்டும் பயில்வதோடு தங்கள் பொதுஅறிவை வளர்த்துகொள்வதற்கும், அறிஞர்களாக வருவதற்கும் அதிக அளவில் புத்தகங்களை படிக்க வேண்டும். பொது அறிவை வளர்த்துகொண்டால்தான் சாதனையாளர்களாக திகழமுடியும் என்றார். இதில் டிஆர்ஓ உமாமகேஸ்வரி, வணிகர் சங்க தலைவர் மதியழகன், பொருளாளர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் முராபாஸ்கர், நிலாப்சந்த்,பவுல்ராஜ், ரோட்டரி சாசனத்தலைவர் ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.