முதுகுளத்தூர்
அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரிடர் மேலாண்மை
பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ரஞ்சித்சிங் உத்தரவின் பேரில் தீயணைப்பு மற்றும் வருவாய் துறை பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில்
வட்டாட்சியர் சடையாண்டி, ஆசிரியர் சந்தானவேலு, ஆகியோர் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் கதிரவன், தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் சங்கர் ஆகியோரின் முன்னிலையில்
பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில் அனைவரையும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார்.
தீயணைப்பு மற்றும் பேரிடர் துறை சார்பில் தீயணைப்புத் துறை அலுவலர்களால்மழை, வெள்ள காலங்களிலும் திருவிழா காலங்களிலும் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தன்னார்
வளர்கள் மூலமாகவும் மாணவர்கள் மூலமாகவும் செயல் விளக்கம் செய்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் வட்டார வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள், தன்னார்
வளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.