திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவிரி மருத்துவமனை இணைந்து பெண் காவலர்களுக்கு இலவசமாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும்
பரிசோதனை முகாம்.
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவிரி மருத்துவமனை இணைந்து பெண் காவலர்களுக்கும், மகளிர் ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறையினரின் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் இலவசமாக மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியும்
பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் பயிற்சி
ASP .அஸ்வினி ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மகப்பேறு மருத்துவ மகளிர் சங்கத் தலைவர் டாக்டர். அமலா தேவி, மற்றும் செயலர் டாக்டர். செல்வராணி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் HPV தடுப்பூசி பற்றியும் விரிவாக விளக்கினார்கள். ஆயுதப்படை டிஎஸ்பி ஆனந்தராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். குயின் சிட்டி சங்கத்தின் தலைவர் Rtn.கவிதா செந்தில்குமார் செயலர் Rtn.பார்க்கவி சந்தோஷ் ஆகியோர் குயின் சிட்டியின் திட்டமான செர்வி க்யூர் பற்றி விளக்கி பேசினார்கள். ஜனவரியில் நடக்க இருக்கும் அடுத்த ஹச்பிவி தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடுவதற்கு ஊர்க் காவல் படையினரும், காவல்துறையினரும் முன்பதிவு செய்து கொண்டனர். அனைவருக்கும் ஹச்பிவி தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை கொண்டு செல்வதற்கு திண்டுக்கல் பசுமை எப்எம் குயின் சிட்டி சங்கத்துடன் இணைந்து செயல்பட்டது.