தருமபுரி, நவம்பர் 17 –
தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளில் ஏற்படும் குளறுபடிகளை கண்டித்து பி எஸ் என் எல் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பறிக்காதே பறிக்காதே வாக்குரிமையை பறிக்காதே, சரிபடுத்து சரிபடுத்து எஸ் ஐ ஆர் சரிபடுத்து போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட இளைஞரணி விமல் ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோபி, தருமபுரி தெற்கு ஒன்றிய செந்தில்நாதன் மற்றும் அனைத்து மாவட்ட, நகர, மகளிர் அணி, கழக சார்பு அணிகளின் ஒன்றிய, கிளை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



